காலையில் ஒரு கூட்டம், அதிக வேலையில் பட்ஜெட், இதுபோன்று எங்காவது நடக்குமா? அப்படி ஒரு அநியாயத்தை கோவை மாநகராட்சி செய்து கொண்டு இருக்கிறது. இந்த சாதாரண கூட்டத்தில், 132 சப்ஜெக்ட்கள் விவாதிக்கப்படுகிறது. 54 சப்ஜெக்ட்கள் இரண்டு நாட்களுக்கு முன்னரே கொடுக்கப்பட்டு விட்டது.
நேற்று (மார்ச் 28) இரவு 82 சப்ஜெக்ட்களை கொடுக்கிறார்கள். எப்படி படித்து புரிந்து கொள்ள முடியும்? மாமன்ற உறுப்பினர்கள் அதற்கு உள்ளாக எப்படி அதை படித்து புரிந்து கொள்ள முடியும். அதேபோல குப்பை டெண்டர் விடப்பட்டதில் மிகப்பெரிய மோசடி நடைபெற்று இருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.