கோவை அருகே உள்ள கிராமத்தில் 85 வயது மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். இவருக்கு, கட்டிட தொழிலாளியான நாச்சிமுத்து (வயது 55) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி கூச்சலிட்டுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் விரைந்து வந்துள்ளனர். இதை பார்த்த நாச்சிமுத்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் கூலூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று வழக்கு பதிவு செய்து நாச்சிமுத்துவை மடக்கி பிடித்து கைது செய்தனர்.