மேலும் சாக்கடை நீருடன் மழை நீரும் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் ஊர்ந்தபடி சென்றனர். கடந்த ஒரு மாத காலமாக ஆடிப்பட்டத்தில் நடவு செய்த விவசாயிகள் மழை வேண்டி காத்திருந்த நிலையில் தற்போது மழை பெய்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேவேளை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கோவை புறநகரப் பகுதிகளில் வெப்பம் சுட்டெரித்து வந்த நிலையில், மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
"திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர்".. பிரதமர் மோடி