அவரிடம் கத்தி இருந்ததைக் கண்ட பொதுமக்கள், அதிர்ச்சியடைந்து அவரது கைகால்களைக் கட்டிவைத்து மேலும் தர்மாடி கொடுத்துள்ளனர். பின்னர் சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உதயகுமாரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் என்பது தெரியவந்தது. உதயகுமாரிடம் இருந்து கத்தியைப் பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் கண்ணம்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு