கோவை சூலூர் அருகே நடந்த சிறுமி பாலியல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக், காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்து காயமடைந்ததாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாத நிலையில், சூலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் இன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.