புல் நிறுவனத்தின் இந்த புதிய இயந்திரம், ஆபரேட்டர்கள் எளிதாக இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமீபத்திய BS5-CEV சுற்றுச்சூழல் தர விதிமுறைகளுக்கு இணங்க, இதன் செயல்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டே இந்த இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூப்பர்ஸ்மார்ட் மாடல், அதிநவீன தொழில்நுட்பம், நிரூபிக்கப்பட்ட நம்பகத்தன்மை மற்றும் புதுமையான அம்சங்களை உள்ளடக்கியது. இதன் மூலம், வேலைகளின் தேவைக்கு ஏற்ப செயல்திறனை மாற்றியமைக்க முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.