கடந்த சில தினங்களுக்கு முன்பு, தொழிலதிபரின் 11 வயது மகன் திடீரென மாயமானார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தொழிலதிபரின் கார் ஓட்டுநர் குழந்தையைக் கடத்தியது தெரியவந்தது.
குழந்தையை விடுவிக்க ரூ. 12 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு, கார் ஓட்டுநரைக் கைது செய்தனர். மேலும், கடத்தப்பட்ட குழந்தையையும் பத்திரமாக மீட்டனர். செய்தியாளர்களை சந்தித்த தொழிலதிபர், தனது மகனை விரைவாக மீட்டுக்கொடுத்த கோவை காவல்துறையினருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். மேலும், காவல்துறையினரின் துரித நடவடிக்கைக்குப் பாராட்டு தெரிவித்தார்.