கோவை: கர்நாடகாவிலிருந்து குட்கா கடத்தல்; கார் டிரைவர் தப்பியோட்டம்

சூலூர் அருகே சங்கோதிபாளையம் பகுதியில், கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு குட்கா கடத்தி வந்த சிவப்பு நிற கார் ஒன்றை போலீசார் துரத்திப் பிடித்து, சுமார் 360 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். சந்தேகத்துக்கிடமான காரை நிறுத்த சைகை காட்டியபோதும் ஓட்டுநர் தப்பிச் செல்ல முயன்றார். போலீசார் காரை மறித்து சோதனையிட்டபோது, மூட்டைகளில் நிரம்பிய 360 கிலோ குட்கா, இரண்டு போலி நம்பர் பிளேட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி