இந்நிலையில், வீட்டு பீரோவில் இருந்த நகைகள் சிறிது சிறிதாக திருடு போனது. இதனையறிந்து அதிர்ச்சியடைந்த சிவசுப்பிரமணியம் இது குறித்து ஆர். எஸ். புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், வீட்டு வேலைக்காரப் பெண் கவிதா என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், கவிதா கடந்த பிப்ரவரி மாதம் முதல் கடந்த மாதம் வரை ரூ. 28 லட்சம் மதிப்பிலான 36 பவுன் நகையை திருடி சென்றதும், இவருக்கு பூ மார்க்கெட் தெப்பகுளம் தெருவை சேர்ந்த ராஜேந்திரன்(53) என்பவர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நேற்று இருவரையும் கைது செய்தனர்.
தமிழ்நாட்டில் 17 இடங்களில் சதமடித்த வெயில்