உடனே கார்மெல் வேணுகோபால், நண்பரான கோவை இருகூரை சேர்ந்த நந்தகோபால்(43) என்பவரிடம் விவரத்தை கூறி வீட்டுக்கு சென்று பார்க்குமாறு தெரிவித்தார். அவர் சென்று பார்த்தபோது, வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் அங்கிருந்த ரூ. 1 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து நந்தகோபால் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில், போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வீட்டுக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு பதிவாகியிருந்த 1 கைரேகை பதிவை கைப்பற்றினர். அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.