பொள்ளாச்சி ஜோதிநகர் பகுதியில், பிளஸ்-2 படித்து வந்த 17 வயது மாணவி இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 21 வயது வாலிபருடன் ஏற்பட்ட காதல் தோல்வியைத் தொடர்ந்து மனவேதனையில் சிக்கி, நேற்று (ஜூன் 3) தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி நகர கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துயர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.