இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சுரேஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை காட்டி மிரட்டி சங்கரிடம் இருந்த ரூ. 500ஐ பறித்து தப்பி சென்றார். இது குறித்து சங்கர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் பறிப்பில் ஈடுபட்ட மணியக்காரம்பாளையம் ரங்கநாதர் தெருவை சேர்ந்த சுரேஷ்(47) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி