இதுகுறித்து விஜயனின் மனைவி சத்யா காவல் ஆணையாளரிடம் நேற்று புகார் அளித்துள்ளார். சத்யாவின் புகாரில், சந்தன மரக்கட்டை காணாமல் போனதால், எனது கணவரையும், ரங்கநாதனையும், பொன்னுச்சாமி என்பவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து சித்திரவதை செய்துள்ளனர். மரத்தை வெட்டி விற்றதாக ஒப்புக்கொள்ளும்படி மிரட்டினர்.
கோவையில் எங்கு சந்தன மரம் காணாமல் போனாலும், எனது கணவரையும், அவரது உறவினர்களையும் குறிவைத்து காவல்துறையினர் சித்திரவதை செய்கின்றனர். எனவே, வடவள்ளி காவல் நிலையத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.