கோவை: மூன்றாம் பாலினத்தவருக்கான.. சிறகுகள் கடன் திட்டம்

மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்வாதார மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு, தமிழக அரசு செயல்படுத்தி வரும் சிறகுகள் எனும் சிறப்பு கடன் திட்டம் மூலம் நிதி உதவியைப் பெற்றுத் தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக, மூன்றாம் பாலினத்தவர்கள் அடிப்படை நிதிச் சேவைகளைப் பெறுவதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஊக்கமாக, 5 சதவீத குறைந்த வட்டியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

18 வயதிற்கு மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள் வாயிலாக இத்திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். சிறு தொழில்கள் மற்றும் சுயதொழில் செய்வோருக்கு இது மிகுந்த பயனளிக்கக்கூடியதாக இருக்கும். கோவை மாவட்டத்தில், நடப்பு நிதியாண்டில் இதுவரை நான்கு பயனாளர்களுக்கு, மொத்தம் ரூ. 2 லட்சம் மதிப்பில் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு, அருகிலுள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகளை நாடலாம் என வங்கி நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி