இந்த செய்தி அறியாமல் வந்த மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பினர். இப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளன. கேஸ் கசிவு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னரே கடைகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. வாகனங்கள் புரூக்பாண்டு சாலை, மரக்கடை, ரயில்வே நிலையம் பின்புறம் மற்றும் தண்டுமாரியம்மன் கோவில் பகுதிகளில் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படுகின்றன.
சுமார் 30க்கும் மேற்பட்ட போக்குவரத்து காவல்துறையினர் இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் பயணிப்பவர்கள் மாற்று வழிகளை பயன்படுத்தி பயணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.