தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை என குற்றம்சாட்டிய அவர், தர்மபுரியில் விவசாயி ஒருவர் மனுவை ஏற்க மறுத்ததால் தற்கொலைக்கு முயன்றதாகவும், அரசு அவருக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார். டெல்டா விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் பணம் 400 கோடி ரூபாய் நிலுவையிலுள்ளதாகவும், திமுக அரசு விவசாயிகளை வஞ்சிக்கிறது என்றும் விமர்சித்தார்.
பா.ம.க-வில் உள்ள உள்கட்சி விவகாரம் குறித்து கேள்வியைக் கூறி, அவர்கள் சொந்த பிரச்சனை, அதில் நாங்கள் தலையிட வேண்டியதில்லை எனவும், சமாதானமே அனைவருக்கும் நன்மை தரும் என்றும் கூறினார்.