கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில், மாணவர்கள் மகிழ்ச்சியுடன் முதல் நாள் பாடங்களைத் தொடங்கினர்.