பொள்ளாச்சி அருகே நெகமம் பகுதியில் ஒருதலைக் காதல் காரணமாக அபிஷேக் (24) என்ற வாலிபர், கவுசி (16) மற்றும் அவரது பாட்டி மயிலாத்தாள் (65) ஆகியோரை கத்தியால் குத்திக் கொன்றார். இந்த தாக்குதலில் கவுசியின் அக்காள் ஹரிதா படுகாயம் அடைந்தார். பின்னர் விஷம் குடித்து அபிஷேக் போலீசில் சரணடைந்தார். விசாரணையின் போது மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.