வரலாற்று தகவல்களின்படி, திப்பு சுல்தான் மைசூரிலிருந்து பாலக்காடு செல்ல இந்த வழியைப் பயன்படுத்தியதுடன், தண்டல் நாயக்கனின் கோட்டையும் இங்கு இருந்தது. அணை கட்டப்பட்ட பிறகு தண்ணீரில் மூழ்கிய வீடுகள் சிதலமடைந்து, தற்போது கற்குவியல்களாக காணப்படுகின்றன. சிலர் இந்த இடங்களில் புதையல் தோண்டியுள்ளதாகவும், பின்னர் அச்சம் காரணமாக முயற்சியை கைவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தெளிவுபடுத்த, இவை உண்மையில் குள்ள மனிதர்களின் குடியிருப்பாக இருந்ததா என்ற கேள்விக்கு பதிலாக, தொல்லியல்துறை விரைந்து ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.