இது குறித்து 180க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று கழுத்தில் காய்கறி மாலைகளை அணிந்து வந்து புகார் மனு அளித்துள்ளனர். இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், நாங்கள் பல வருடங்களாக வியாபாரம் செய்து வருகிறோம்.
திடீரென சுங்க வரியை இரட்டிப்பாக்கி உள்ளனர். அதேபோல் வெளியில் கடை வைத்துள்ளவர்கள் உள்ளே தான் காய்கறிகள் வாங்க வேண்டும் என்கின்றனர். இதனால் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.