அப்போது உக்கடம் ஜி. எம் நகரை சேர்ந்த முகமது நஸ்ருதீன் (24) என்பவரை போலீசார் சோதனை செய்தபோது அவர் மது அருந்தி இருந்ததாக தெரிகிறது. அதை தொடர்ந்து அவர் மீது போலீசார் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து முகமது நஸ்ருதீன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவகுமாரிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார். தேவகுமார் உக்கடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் தண்ணீர் லாரி டிரைவர் முகமது நஸ்ருதீன் மீது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி