இந்நிலையில், நேற்று திருவள்ளுவர் திடல் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் ரோடுகளில், நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அவ்வழியாக சரக்கு ஏற்றி வந்த வாகனங்களை அதிகாரிகள் சோதனையிட்ட போது, பொருட்களோடு பொருட்களாக பதுக்கி பிளாஸ்டிக் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, நகராட்சி அலுவலகத்துக்கு வாகனங்கள் கொண்டு வரப்பட்டு, பிளாஸ்டிக் மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் மூன்று வாகனங்களில் இருந்து 30 மூட்டைகளில் 1750 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லையப்பர் கோயில் தேர் ஓடும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு