இதனால் அவரது தந்தை பாலமுருகன் மகனை அழைத்து வர அங்கு சென்றார். அப்போது வீட்டின் ஒரு அறை கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் தட்டியும் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த பாலமுருகன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கபிலேஸ் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவலின் பேரில் வந்த போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து சாயிபாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.