விபத்தில் மூன்றாவதாக பெருந்துறையில் இருந்து நோயாளியை கோவை அரசு மருத்துவமனைக்கு ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த ஆம்புலன்ஸும் விபத்தில் சிக்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. முன்னால் சென்ற கார் எதற்காக திடீரென பிரேக் பிடித்து நிறுத்தப்பட்டது என்பது குறித்தான காரணங்கள் இதுவரை தெரியவரவில்லை, காரின் ஓட்டுனர் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து இருபது நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் அங்கு விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்