கோவை: நாளை முதல் ஸ்கேன் முறை மூலம் மதுபான விற்பனை

கோவை மாவட்டத்தின் 286 டாஸ்மாக் கடைகளில், மதுபாட்டில்கள் ஸ்கேன் செய்யப்பட்ட பிறகு மட்டுமே விற்பனை செய்யும் புதிய முறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய முறை மூலம், ஒவ்வொரு பாட்டிலும் QR கோடு கொண்டு கண்காணிக்கப்படும். தொழிற்சாலையிலிருந்து டாஸ்மாக் கடை வரை பாட்டிலின் பயணம் பதிவு செய்யப்படும். இதனால், உற்பத்தி தேதி, விற்பனை இடம் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் எளிதாக கண்காணிக்கலாம். 

முறைகேடுகள் மற்றும் கலால் வரி ஏய்ப்பை தடுக்க இது உதவும். இதற்காக, கோவை வடக்கு பகுதியிலுள்ள 500 ஊழியர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி வழங்கப்பட்டது. தெற்குப் பகுதிக்கான பயிற்சி பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. விற்பனை நேரமான மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இந்த ஸ்கேன் முறை செயல்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி