கோவை மலுமிச்சம்பட்டி அருகே குடியிருப்புப் பகுதிக்குள் அதீத நச்சுத்தன்மை கொண்ட கட்டுவிரியன் பாம்பு புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். தகவலறிந்து வந்த வனவிலங்கு மீட்புக் குழுவினர், பாம்பை பாதுகாப்பாக பிடித்து மீட்டனர். பின்னர் அந்த பாம்பை அடர்ந்த வனப்பகுதிக்குள் பத்திரமாக விடுவித்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.