தமிழ்நாட்டு மாணவர்களை திமுக தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறது, தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழ்படுத்தி வருகிறது, தமிழக எம்பிக்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதிகள் என்று பேசினார். தர்மேந்திர பிரதானின் இந்த பேச்சுக்கு, கோவையில் திமுக சார்பில் நேற்று உருவபொம்மை எரிக்கும் போராட்டம் நடத்தப்பட்டது.
காந்திபுரம் நகர பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாசிலை முன்பு, மத்திய அமைச்சருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி, பெட்ரோல் ஊற்றி தர்மேந்திர பிரதான் உருவப்பொம்மையை எரித்து, கண்டன முழக்கங்களை எழுப்பினர். கோவை மாநகர மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ கார்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.