அப்போது, அந்த வழியாக வந்த ஒரு நபரை நிறுத்தி சோதனை செய்ததில், அவரிடம் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் இருப்பது தெரியவந்தது.விசாரணையில், அவர் அணைமலை சின்னம்பாளையத்தைச் சேர்ந்த ராஜா உடையார் (61) என்பது தெரியவந்தது.
மேலும், அவரிடம் இருந்து 51 கேரள மாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, ராஜா உடையாரை காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.