கடந்த 20 ஆண்டுகளாக கோவை பகுதிகளில் ராஜ நாகம் உள்ளிட்ட பல விஷ பாம்புகளை குடியிருப்பு பகுதிகளில் இருந்து பிடித்து வனப்பகுதியில் விடுவித்து வருகிறார் சந்தோஷ். இந்நிலையில் அவருக்கு பாம்பு கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாம்பு கடித்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். பாம்பு பிடி வீரரையே பாம்பு கடித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.