கோவை: நாட்டு மருந்துகள் குறித்த பொய்யான தகவல்கள்

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் உள்ள ஸ்ரீ நாக சக்தி அம்மன் தெய்வீக மூலிகை ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர், நிலவேம்பு சித்தர் என அறியப்படும் ஜகத்குரு ஸ்ரீலஸ்ரீ சிவசண்முகசுந்தர பாபுஜி சுவாமிகள், கோவையில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அதில், தமிழக அரசு கொரோனா நோய்க்கு நாட்டு மருந்துகளை அனுமதிக்கவில்லை என சில ஊடகங்கள் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றன. இது ஆங்கில மருத்துவ மாஃபியாக்களின் திட்டமிட்ட செயல் என்று கூறினார். 

மேலும், சித்தா, ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளை அழிக்கவே இத்தகைய தகவல்கள் பரப்பப்படுகின்றன என குற்றம்சாட்டினார். 2009-ல் பரவிய டெங்கு, சிக்கன்குனியா போன்ற நோய்களுக்கு நிலவேம்பு கசாயம் பெரும் பயன்பாடு செய்ததைக் கூறிய அவர், 2014-ம் ஆண்டு அப்போது முதல்வரான ஜெயலலிதா இதற்கு அனுமதி வழங்கியதாகவும், 2020-ல் கொரோனாவுக்கு தடுப்பாக தனது வாகனத்திலேயே நிலவேம்பு கசாயம் விநியோகிக்க அரசு அனுமதி வழங்கியதாகவும் தெரிவித்தார். 

தற்போதைய முதல்வர் மு. க. ஸ்டாலின் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் இந்த கசாயத்தின் மகிமையை எடுத்துரைத்த பிறகு, அதற்கான அனுமதி வழங்கப்பட்டதாகவும் கூறினார். இஞ்சி, பூண்டு, தேன் போன்றவற்றுக்கு கூட அனுமதி இல்லை என கூறுவது பொய். இதற்காக கொலை மிரட்டல் ஏற்பட்டதால் போலீசார் எனக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளனர் என்றும் அவர் நேற்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி