இம்முகாம்களின் தொடர்ச்சியாக, நேற்று பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு மற்றும் ஆனைமலை வட்டாரங்களில் விழிப்புணர்வு வாகனம் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன. பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் சூளேஸ்வரன்பட்டியில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமிற்கு தோட்டக்கலை இணை இயக்குனர் திரு. ஜி. அழகுமலை அவர்கள் தலைமை உரையாற்றினார். தோட்டக்கலை உதவி இயக்குனர் வசுமதி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பூச்சியல் இணை பேராசிரியர் கணேசன் அவர்கள் தென்னை சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவதற்கான தொழில்நுட்ப உரையை வழங்கினார். இந்த முகாமில் 75-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு வெள்ளை ஈக்களை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது குறித்த செயல் விளக்கங்களை ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!