இதுகுறித்து பைசல் உட்பட 8 பேர் மீது தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்கொடுமை உட்பட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து பைசல் உட்பட 7 பேரும் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி விவேகானந்தன், குற்றம் சாட்டப்பட்ட பைசலுக்கு 6 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10,500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மற்ற 6 பேரையும் விடுதலை செய்தார்.