ஆனால், போதை ஆசாமி போலீசாரை ஒருமையில் பேசியது மட்டுமல்லாமல், உன்னால் என்ன செய்ய முடியும், போடா வாடா எனத் தகாத வார்த்தைகளால் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த போலீசார், போதை ஆசாமியின் முகத்தில் தண்ணீரை ஊற்றி, லத்தியால் அடித்து துவைத்தனர்.
பின்னர், போலீசார் அவரை வாகனத்தில் ஏற்றி வெரைட்டிஹால் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். போதை ஆசாமி போலீசாருடன் தகராறு செய்யும் காட்சியும், அவரை அடித்து துவைக்கும் காட்சியும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.