மேட்டுப்பாளையம்: துப்புரவு தொழிலாளி மர்ம மரணம்

மேட்டுப்பாளையம் வெள்ளியம்பாளையம் சாலையில் உள்ள துப்புரவு பணியாளர் குடியிருப்பில் நேற்று முன்தினம் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். விசாரணையில், உயிரிழந்தவர் செல்வத்தின் மனைவி காளிவாணி (38) என்பதும், அவர் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. தைராய்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட காளிவாணி, சுவாச மற்றும் ரத்த அழுத்த பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று அவருக்கு உடல்நிலை மோசமடைந்ததாகவும், உடனடியாக மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் கேபிஎஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால், மேல் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதாகவும் செல்வத்தின் கணவர் தெரிவித்தார். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி