கோவை அருகே குடும்பத் தகராறு காரணமாக தனியார் நிறுவன மேலாளர் குகன் (32) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 12ஆம் தேதி மனைவி பிரீத்தா குடும்பத் தகராறைத் தொடர்ந்து சகோதரர் வீட்டிற்கு சென்ற நிலையில், நகைகள் தொடர்பாக கணவரை தொடர்பு கொண்டபோது அவர் பதிலளிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குகனின் சகோதரர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, குகன் மின்விசிறியில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.