கவுண்டம்பாளையம் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை

கோவை கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணியையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சங்கனூர், நல்லாம்பாளையம், சாய்பாபா காலனி மற்றும் இடையர்பாளையம் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். 

அதன்படி, ஹவுசிங் யூனிட், ஏ. ஆர். நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, முருகன் நகர், அமிர்தா நகர், சபரி கார்டன், ரங்கா லேஅவுட், மற்றும் டி. வி. எஸ். நகர், சாய்பாபா காலனி, இந்திரா நகர், காமராஜ் வீதி, ஸ்டேட் பாங்க் காலனி, கிருஷ்ணா நகர், தேவி நகர், மற்றும் இடையர்பாளையத்தில் பி அண்டு டி காலனி, பூம்புகார் நகர், அருண் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மின்தடை ஏற்படும்.

தொடர்புடைய செய்தி