இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி, இதுகுறித்து கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி, லஞ்சப் பணமான 1000 ரூபாயை காவலர் ரமேஷிடம் கொடுக்கும்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரமேஷை மடக்கிப் பிடித்தனர். ரசாயனம் தடவிய அந்தப் பணத்தை ரமேஷிடம் இருந்து பறிமுதல் செய்த போலீசார், அவரை செட்டிபாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?