கோவை இந்திரா நகரை சேர்ந்தவர் கௌதம் ராஜ் (30). கட்டிட ஒப்பந்ததாரராக உள்ளார். இவர் அங்கு வீடு கட்டி வருகிறார். அதற்காக மூன்றரை கிலோ மின்வயர் வாங்கி வைத்திருந்தார். அதை அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (28) என்பவர் திருடி சென்று விட்டார். இது குறித்து செல்வபுரம் போலீசில் அவர் புகார் கொடுக்க போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று பாஸ்கரை கைது செய்தனர்.