கோவை: மனைவியைக் கொல்ல ஓட்டுநரைத் தூண்டிய முன்னாள் கவுன்சிலர் கைது

கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலரும் முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான கவி சரவணகுமார், தனது மனைவி மகேஸ்வரியைக் கொலை செய்ய தனது ஓட்டுநர் சுரேஷை தூண்டியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அக்டோபர் 28ஆம் தேதி மகேஸ்வரியைக் கொன்ற சுரேஷ் சரணடைந்த நிலையில், கவி சரவணகுமார் விவாகரத்து வழங்க மறுத்த மனைவியைக் கொல்ல பணித்ததாக ஒப்புக்கொண்டார். இதன் அடிப்படையில், கவி சரவணகுமார் இரண்டாவது குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி