இதனால் அதிர்ச்சியடைந்த முத்துராமலிங்கம் கூச்சல் போட்டார். இதனையடுத்து அந்த கும்பல் அவரை அரிவாளால் வெட்டி விடுவதாக மிரட்டி அங்கிருந்து தப்பி ஓடியது. இது குறித்து முத்துராமலிங்கம் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் அரிவாளை காட்டி மிரட்டி மோதிரம் பறித்தவர்கள் கோவை காமராஜபுரம் சங்கனூர் ரோட்டை சேர்ந்த அருள் குமரன்(22), கவுதம்(23), திவாகர்(23) மற்றும் ஹரிகந்த்(19) என்பது தெரியவந்தது. போலீசார் 4 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி