கோயம்புத்தூரில் கோயம்புத்தூர் கல்ச்சுரல் அகாடமியின் 24-வது ஆண்டு விழா தனியார் கலையரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் பின்னணிப் பாடகர் பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் திரைப்பட இயக்குநர் மித்ரன் ஜவஹர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். அகாடமி நிர்வாக இயக்குநர் நவீன்குமார் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். உன்னிகிருஷ்ணன் பாடல்கள் பாட, குழந்தைகளும் உற்சாகமாக இணைந்தனர். மாணவிகளின் நடனத்தை அவர் பாராட்டினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த கலைநிகழ்ச்சி கோயம்புத்தூர் நகரில் சிறப்பாக நடைபெற்றது.