இதை அறிந்த ரஜியா பேகம், தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தகர கொட்டகை அமைத்துள்ளார். ஆனால், இ-பட்டா பெற்ற கலைச்செல்வி கவுன்சிலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் அளித்ததை அடுத்து, அதிகாரிகள் ரஜியா பேகம் அமைத்த கொட்டகையை ஜேசிபி இயந்திரம் மூலம் நேற்று அகற்றியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த ரஜியா பேகம், தான் அமைத்த கொட்டகை முன்பு சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.