பூட்டை உடைக்க முயன்றனர். இதையடுத்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்று உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை செல்வபுரம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு மைய அலுவலகத்தை உக்கடம் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும், எவ்வித தீர்வும் கிடைக்காததால் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் விரைந்து வந்து கோவை தெற்கு தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒதுக்கீடுக்கான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.