இப்பகுதி மலைவாழ் மக்களின் பாதுகாப்பு மற்றும் நக்சல் ஊடுருவலைத் தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பில்லூர் வனப்பகுதியில் இருந்து நேற்று ஒரு காட்டு யானை வெளியேறியது. இந்த யானை நேற்று (ஜூன் 11) பில்லூர் போலீஸ் நிலையத்தின் முன்பு முகாமிட்டு உலா வந்தது.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இத்தகவலின் பேரில் காரமடை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.