இதில் ஆத்திரம் அடைந்த பாஷா அங்கிருந்து சென்று தனது நண்பர்கள் 2 பேரை அழைத்து வந்து சந்திரபாபுவை தகாத வார்த்தைகளால் திட்டி கல் மற்றும் கைகளால் சரமாரியாக தாக்கினார். பலத்த காயம் அடைந்த சந்திரபாபுவை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இதுகுறித்து சந்திரபாபு சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்திரபாபுவை தாக்கிய வடகோவை அம்பேத்கார் வீதியை சேர்ந்த பாஷா (24), கவுண்டம்பாளையத்தை சேர்ந்த இப்ராகிம் (24) மற்றும் வடகோவை பி அண்டு டி காலனியை சேர்ந்த தென்னிலவன் (23) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதி கோரிய சங்கீதா