கோவையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது தெற்கு உக்கடம் புதிய மீன் மார்க்கெட் அருகே சந்தேகத்துடன் 3 வாலிபர்கள் நின்றிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். சோதனை செய்தபோது 3 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்ற தெற்கு உக்கடம் அல் அமீன் காலனியை சேர்ந்த ஷான்ஷா(27), கணபதியை சேர்ந்த ஹேமசந்திரன்(24) மற்றும் திருச்சி ரோடு ஹை-வே காலனியை சேர்ந்த ஜான் ஜோசப்(34) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி