இதன் காரணமாக கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக செங்கல் சூளைகள் இயங்காமல் இருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு, ஒரு செங்கல் சூளையின் புகை போக்கி கோபுரம் கோவை மன்னார்காடு நெடுஞ்சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த நெடுஞ்சாலையில் 60க்கும் மேற்பட்ட கோபுரங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கே. எஸ். பி செங்கல் சூளைக்கு சொந்தமான புகை போக்கி கோபுரத்தை அதன் உரிமையாளர்கள் பாதுகாப்பு கருதி, கிரேன் உதவியுடன் அக்டோபர் நேற்று இடித்தனர். தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்பு குழுவினர், நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் இருக்கும் மற்ற புகை போக்கிகளையும் இடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?