இன்று, சாலையை கடக்க நீண்ட நேரம் காத்திருந்த பெண் ஒருவர், இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த பெண் படுகாயம் அடைந்தார். அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?