பேருந்து காந்திபுரம் பேருந்து நிலையத்தை அடைந்தபோது, தானியங்கி கதவு பூட்டப்பட்டு பின்பக்க கதவு திறக்காத நிலை ஏற்பட்டது. இதனால் பயணிகள் பேருந்தில் ஏறி இறங்க முடியாமல் தவித்தனர். புதிய பேருந்துகளில் தொடர்ந்து ஏற்படும் இத்தகைய தொழில்நுட்பக் கோளாறுகள், பயணிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறி வருகின்றன.
அரசு போக்குவரத்து துறை, பேருந்துகளை முறையாக பராமரித்து, பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் இனிமையான பயணத்தை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது. புதிய பேருந்துகளில் தொழில்நுட்பக் கோளாறுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும். பேருந்துகளின் பராமரிப்பை தீவிரப்படுத்த வேண்டும். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.