மேலும், பிரபாகரனை 3 நிமிடங்கள் மட்டுமே சந்தித்து, புகைப்படம் எடுத்துவிட்டு அதைக் கொண்டு தமிழ்நாட்டில் அரசியல் செய்யும் சீமான், கருத்தரிப்பு மையம் நடத்துகிறார் எனவும் விமர்சித்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த அவர், சசிகலாவின் காலைப் பிடித்து முதலமைச்சர் ஆனவர், இப்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுகவை பலவீனப்படுத்தும் வகையில் செயல்படுகிறார். பெரியாருக்கு சிலை வைத்த எம்ஜிஆரின் அதிமுகவை, இலங்கை போர்க்குற்றத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த ஜெயலலிதாவின் அதிமுகவை, பாஜகவுடன் கூட்டணி வைத்து அதன் நம்பகத்தன்மையை எடப்பாடி பழனிசாமி மாற்றிவிட்டார் எனக் கூறினார்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு